செய்திகள் :

'இதுதான் விதியா...' - விமான கோளாறால் இளைஞருக்கு சாதகமான 'ஹஜ்' பயணம்!

post image

புனித நகரமான மெக்காவுக்கு வழக்கம்போல பயணம் செய்த லிபியாவைச் சேர்ந்த யாத்ரீகருக்கு ஏற்பட்ட தடைகள், அவற்றைத் தாண்டிய அவரது விடாப்பிடியான உறுதியும் நம்பிக்கையும் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் இறை வாழ்க்கையில் மிகவும் ஆழமான ஆன்மிக விருப்பமாகும். அமீர் அல் மஹ்தி மன்சூர் அல் கடாபி என்ற இளைஞர் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் விமான நிலையத்திலேயே அவருக்கு பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

லிபியாவில் உள்நாட்டுப்போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்திருந்தாலும் சில அமைப்புகள் 'அல் கடாபி' என்ற பின் பெயருடன் தொடர்புபடுத்தப்படுவதால் பாதுகாப்பு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்ததனால், உடன் வந்தவர்கள் விமானத்தில் ஏறிய பிறகும் அமீர் விமான நிலையத்திலேயே காத்திருந்தார். அமீர் எவ்வளவு கெஞ்சியும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நேர கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி அவரை ஏற்றிக்கொள்ள மறுத்துவிட்டனர்.

அமீர்
அமீர்

ஆனால் அமீர், "நான் மெக்காவை நோக்கி செல்லாவிட்டாலே ஒழிய இங்கிருந்து நகரமாட்டேன்" என விமான நிலைய அதிகாரிகளிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தொழில்நுட்பக் காரணங்களால் விமானம் மீண்டும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழுது பார்க்க தாமதமாகி, மீண்டும் புறப்பட்டது. அப்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அவசர அவசரமாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி, இந்த முறை அமீரை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட மாட்டேன் எனக் கூறினாராம்.

அதிகாரிகள் விரைவாக அமீரை பயணத்துக்கு அனுமதித்துள்ளனர். மூன்றாவது முறை அமீருடன் செல்கையில் விமானம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சென்றுள்ளது.

இந்த கதை சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்துப் பேசிய அமீர், "நான் ஹஜுக்கு மட்டுமே செல்ல விரும்பினேன். அது எனக்காக எழுதப்பட்டிருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடை... மேலும் பார்க்க

சபரிமலை: ஐயப்ப சுவாமி கோயில் வைகாசி மாத பூஜைகள்; பக்தர்கள் தரிசனம் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வைகாசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுப் படி பூஜை, களபம் எழுந்தருளல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சபரிமலையில் பங்குனி உத்திர ஆறா... மேலும் பார்க்க

பாதி நுழைவுவாயில் இந்து கோயிலுக்கு; பாதி பள்ளிவாசலுக்கு... கேரளாவின் ஆச்சர்ய கிராமம் மேலேகுற்றிமூடு!

அரசியல் கட்சிகள், அமைப்புகள் ரீதியாக பின்னிப்பிணைந்தவர்கள் கேரள மக்கள். அரசியல் ரீதியாக பல மோதல்கள் நடைபெற்றாலும் மத நல்லிணக்கத்துக்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். தி கேரளா ஸ்டோரி என்ற சினிம... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு; பதிவு செய்யுங்கள்!

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு! பதிவு செய்யுங்கள்! 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சி... மேலும் பார்க்க

சித்ரா பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை வரும் பக்தர்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது?

நாளை ஞாயிற்றுக்கிழமை (11-5-2025) சித்ரா பௌர்ணமி. இந்த நன்னாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனும் பேறும் கிடைக்கும் என்கிறது தலவரலாறு. எனவே, நாளை இரவு 8.53 மணி ம... மேலும் பார்க்க