செய்திகள் :

``இது என் அம்மா, மீண்டும் கடலில் வீசிவிடுங்கள்.." - ஒரு தாயின் ஆசைக்கு மகளின் நெகிழ்ச்சி செயல்!

post image

இங்கிலாந்தின் ஓல்ட்ஹாம் பகுதி கடற்கரையில் கண்ணாடி பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சுருட்டப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. அந்தக் காகிதத்தில், ``இந்த பாட்டிலில் இருப்பது என் அம்மா... அவர் உயிருடன் இருக்கும்போது இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்பினார். எனவே, உங்கள் கரங்களில் இந்த பாட்டில் கிடைத்தால் தயவுசெய்து மீண்டும் கடலில் எறிந்துவிடுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Daughter - Mother

அந்த பாட்டிலையும், அதன் வாசகத்தையும் ஒரு பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, ``இந்த அழகான பெண் இருக்கும் பாட்டிலை இன்று அதிகாலை ஸ்கெக்னஸ் கடற்கரையில் கண்டோம்... அந்தக் கடிதத்தில் கேட்டபடி மீண்டும் கடலில் வீசிவிட்டோம். மகிழ்ச்சியாக பயணியுங்கள் அம்மா" என சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

இது தொடர்பாக பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஓல்ட்ஹாமைச் சேர்ந்த 24 வயது காரா மெலியா என்றப் பெண், 51 வயதில் காலமான தன் தாய் வெண்டி சாட்விக்கின் சாம்பலை ஒரு பாட்டிலில் நிரப்பி அதில், சில வாசகங்களை எழுதி கடலில் வீசியிருக்கிறார். இது தொடர்பாக பிபிசியிடம் காரா மெலியா பேசினார்.

கிடைத்த பாட்டில்
கிடைத்த பாட்டில்

ஒரு தாயின் நிறைவேறாத கனவு

அப்போது, `` என் அம்மா வெண்டி சாட்விக் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என ஏங்கினார், ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்கே செலவிட்டார். அவரின் பெரும் ஆசையே யாருக்கும் அவரைத் தெரியாத புதிய தேசத்தில் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என விரும்பினார்.

அவரின் மறைவு எங்களை கடுமையாக பாதித்தது. அவருக்கென அவர் எதுவும் செய்துகொள்ளவில்லை என்பதும் வேதனையாக இருந்தது. அதனால்தான் அவரின் சாம்பலை கடலில் வீசினேன்' என்றார். அவர் கடலில் வீசிய பாட்டில் அடுத்த 12 மணி நேரத்தில் ஸ்கெக்னஸ் பகுதியில் அந்த பாட்டில் கரை ஒதுங்கியது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

ஹாய், எப்படி இருக்கீங்க!நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையு... மேலும் பார்க்க

மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?

பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார். ஆரம்பத்தில் ... மேலும் பார்க்க

மாதம் ரூ.15,000 முதல் ரூ.1.26 லட்சம் வரை ; இந்தியா டு அமெரிக்கா... விந்தணு தானமும் வருமானமும்!

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை க... மேலும் பார்க்க

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய த... மேலும் பார்க்க