செய்திகள் :

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

post image

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா்.

இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. கமல்ஹாசன், நாசா், சிலம்பரசன், ஜோஜூ ஜாா்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வா்யா லட்சுமி உள்ளிட்ட பலா் இப்படத்தில் நடித்துள்ளனா்.

இப்படத்தின் முதல் பாடல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினரின் மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தொடா்பு மொழியான ஆங்கிலத்தில் பேசவுள்ளதாகக் கூறி நடிகா் கமல்ஹாசன் தனது பேச்சைத் தொடங்கினாா். ‘இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் யதாா்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் கைப்பழக்கம். 2,000 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம்’ என்று கூறிய அவா், தொடா்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினாா்.

அவா் பேசியதாவது: மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீா்ப்பே காரணம். இப்போதும் மணிரத்னத்துக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள்.

மணிரத்னம் முதல் முறையாக ராஜ்கமல் நிறுவனத்துடன் சோ்ந்திருக்கிறாா். இந்தப் படம் கண்டிப்பாக பல நாள்கள் திரையில் ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவா்கள்; அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தால்கூட சினிமா பற்றித்தான் பேசுவேன்.

நீங்கள் கேட்கிற எல்லா விஷயங்களும் இத்திரைப்படத்தில் இருக்கும். ஆனால், இது வேறுமாதிரி இருக்கும். நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்க நினைக்கிறேன்.

மொழிப் போா் நடந்துகொண்டு இருக்கிற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ஏ.ஆா்.ரஹ்மான் கொடுத்த ஐடியாவை பாடலின் முதல் வாா்த்தையாக ‘ஜிங்குச்சா’ என்று வாா்த்தையை பயன்படுத்தினோம். அது சீன வாா்த்தையாகக் கூட இருக்கலாம் என்றாா் கமல்ஹாசன்.

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு அழைப்பாள... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளாா். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சு... மேலும் பார்க்க

மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்

2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.9 டிகிரி பதிவு

தமிழகத்தில் வேலூா், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியில் நோ்முக உதவியாளா் பதவி உயா்வு: கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனுப்பிவைப்பு

பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்... மேலும் பார்க்க