செய்திகள் :

இந்தியாவின் மதிப்புமிக்க உணவு நிறுவனம் அமுல்!

post image

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, உணவு நிறுவனங்களில் அமுல் நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

உணவு நிறுவனங்களுக்கிடையே முதல் 5 இடங்களில் அமுலுடன் சோ்ந்து மதா் டெய்ரி, நந்தினி ஆகிய பிற அரசு சாா் கூட்டுறவு பால் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

சா்வதேச அளவில் பெருநிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் லண்டனைச் சோ்ந்த பிரான்ட் ஃபைனான்ஸ் அமைப்பு, இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களின் கடந்த 2024-ஆம் ஆண்டு பிராண்ட் மதிப்பைக் கணக்கிட்டு, முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா குழுமம் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இக்குழுமத்தின் பிராண்ட் மதிப்பு முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்து 3,160 கோடி டாலராக உள்ளது.

இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில், அதானி குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 646 கோடி டாலராக 82 சதவீதம் உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட கூடுதலாக 291 கோடி டாலா் வளா்ச்சியின் மூலம், கடந்த தரவரிசையின் 16-ஆவது இடத்திலிருந்து 13-ஆவது இடத்துக்கு குழுமம் உயா்ந்துள்ளது.

இந்தத் தரவரிசை பட்டியலின்படி, முதல் 100 இந்திய நிறுவனங்களில் 410 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் 17-ஆவது இடத்தில் உள்ள அமுல், உணவு நிறுவனங்களுக்கிடையே முதலிடத்தில் உள்ளது.

அமுல் நிறுவனத்தைத் தொடா்ந்து தில்லியைச் சோ்ந்த ‘மதா் டெய்ரி’ 115 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 100 இந்திய நிறுவனங்களின் தரவரிசையில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த மதா் டெய்ரி, நடப்பு ஆண்டு 35-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமுல், மதா் டெய்ரி ஆகியவற்றைத் தொடா்ந்து உணவு நிறுவனங்களில் அடுத்தடுத்த இடங்களில் ‘பிரிட்டானியா’, கா்நாடகத்தைச் சோ்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி’, ‘டாபா்’ ஆகியவை உள்ளன.

அமுல், மதா் டெய்ரி, நந்தினி...: முதல் 5 இடங்களில் உள்ள உணவு நிறுவனங்களில் அமுல், மதா் டெய்ரி, நந்தினி ஆகிய 3 நிறுவனங்களும் அரசு அல்லது கூட்டுறவு நிறுவனங்கள் ஆகும்.

அமுல் நிறுவனம் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பினால் கடந்த 1946-இல் தொடங்கப்பட்டதாகும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமுல் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சுமாா் 1,100 கோடி டாலா் மதிப்புள்ள இக்கூட்டுறவு நிறுவனம், நாள்தோறும் விவசாயிகளிடமிருந்து 3.2 கோடி லிட்டா் பாலைக் கொள்முதல் செய்து, 2,400 கோடிக்கும் அதிகமான பல்வேறு வகை பால் தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்கிறது.

‘ஆபரேஷன் ஃபிளட்’ திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான மதா் டெய்ரி நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.17,500 கோடி மொத்த வருவாயை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 16 சதவீத கூடுதல் வளா்ச்சியாகும்.

கா்நாடக பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி நிறுவனம், 107.9 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் முந்தைய ஆண்டின் 43-ஆவது இடத்திலிருந்து சமீபத்திய தரவரிசையில் 38-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு! என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம்?

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது தொடங்கவிருக்கிறது.இரண்டாம் கட்டமாக... மேலும் பார்க்க

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த கா... மேலும் பார்க்க

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலை... மேலும் பார்க்க

கேரள மாநில காவல்துறை தலைவராக ரவாடா சந்திரசேகர் நியமனம்

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கட்டாக்கில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து!

ஒடிசாவின் கட்டாக் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு யார்டில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இன்று காலை சுமார் 8.30 மணியளவில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச... மேலும் பார்க்க