செய்திகள் :

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

post image

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விமானம் விழுந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட மொத்தம் 274 பேர் பலியாகினர்.

Air India crash

ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்திருக்கிறார்.

ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்கப்பட்ட AI 171 இன் கருப்புப் பெட்டி விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளது என்றும், முழுமையான ஆய்வுகாக நாட்டிற்கு வெளியே அனுப்பப்படாது என்றும் முரளீதர் மொஹோல் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ndtv -க்கு அளித்த பேட்டியில் இணை அமைச்சர் முரளீதர் மொஹோல் கூறுகையில், "இந்த விமான விபத்து ஒரு துயர சம்பவம். இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு இதுபோன்ற சதி நடத்தப்பட்டதா? உள்ளிட்ட எல்லா கோணங்களிலும் இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் இதற்காக பணியாற்றி வருகின்றன.

சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, முழு அவசரநிலையைக் குறிக்கும் வகையில், விமானி 'மேடே' துயர அழைப்பை விடுத்ததாக அகமதாபாத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு தெரிவித்துள்ளது. இந்த விபத்து அரிதான நிகழ்வு. இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல்படாமல் போனது ஒருபோதும் நடந்ததில்லை".

விசாரணை அறிக்கை வந்தவுடன் அது இஞ்சின் பிரச்னையா? அல்லது எரிபொருள் விநியோகப் பிரச்னையா? அல்லது இரண்டு எஞ்சின்களும் ஏன் செயல்படவில்லை என்பது குறித்து கண்டறிய முடியும். இதற்கான அறிக்கை மூன்று மாதங்களில் வெளிவரும்.

மீட்கப்பட்ட கருப்பு பெட்டி எங்கும் செல்லாது. அது விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளது. அதை வெளியே அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நாங்கள் முழு விசாரணையையும் செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள், நீண்ட நேரம் வேலை செய்ய துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தால், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை அணுகலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ... மேலும் பார்க்க

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குன்னூர் நகரின் நுழைவு... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிற... மேலும் பார்க்க

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க