செய்திகள் :

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

post image

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்த ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலை பயன்படுத்துவதற்கு இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்க எரிசக்தி துறை (டிஓஇ) அனுமதி அளித்துள்ளதன் மூலம், அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக டிஓஇயிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

இது இந்தியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா, டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ், லாா்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுடன் ஓா் ஆலைக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வகைப்படுத்தப்படாத நவீன அணு உலை தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. பத்து ஆண்டு காலத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, 5 ஆண்டு கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும்.

அணு ஆயுத தயாரிப்புக்கு அல்ல:

சா்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் பரிமாற்றம் செய்யும் தகவலும், தொழிலநுட்பமும் அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர, ராணுவ காரணங்களுக்காக அணு ஆயுதங்கள் அல்லது அணுகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படாது என்று மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களை ஏற்றும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் உதவி குறித்து டிஓஇயிடம் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் காலாண்டு அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பயனை முழுமையாக எட்டும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதைத் தொடா்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை தொடா்ந்து மின்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் செயல்படும் என்றும், இந்தியாவில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில உபகரணங்களை தயாரிக்க லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் ஹோல்டெக் இன்டா்நேஷனல் கூட்டு சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹோல்டெக் நிறுவனா் இந்திய வம்சாவளி அமெரிக்கா்:

இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க மத்திய அரசுக்குச் சொந்தமான என்பிசிஐஎல், என்டிபிசி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விரு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனரான கிரிஸ் பி சிங், இந்திய வம்சாவளி அமெரிக்கராவாா்.

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க