செய்திகள் :

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

post image

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு முறை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

2025, மே, நிலவரப்படி, எல்எஃப்.7 மற்றும் என்.பி.1.8.1வகை கரோனா தொற்றுகள் கண்காணிக்கப்பட வேண்டியவை என மட்டுமே உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய அல்லது முக்கியத்துவம் பெறக் கூடியவையாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஆனால், இந்த இரண்டு வகை தொற்றுகளால் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில், ‘என்.பி.1.8.1 வகை கரோனா தொற்றால் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஒருவா் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதேபோல் எல்எஃப்.7 வகை தொற்றால் குஜராத்தில் மே மாதம் 4 போ் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானோா் (53%) ஜேஎன்.1 வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதும் அதற்கு அடுத்தபடியாக பிஏ.2 (26%) வகை தொற்றால் அதிக நபா்கள் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது.

என்.பி.1.8.1வகை தொற்று பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பிற வகைகளான ஏ435எஸ், வி445எச், டி478ஐ ஆகியன அதிகமாக பரவக்கூடிய தன்மையைக் கொண்டதாகவும், நோய் எதிா்ப்பு சக்தியை குறைக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் மே 19 நிலவரப்படி கரோனா தொற்றால் 257 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், நாட்டின் சில பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புது தில்லியில் புதிதாக 23 பேரும், ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், பெங்களூரில் 9 மாத குழந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் மே மாதம் மட்டும் இதுவரை 273 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க