செய்திகள் :

இந்தியா-இலங்கை ஒப்பந்த விவரங்கள் வெளியிடாமல் உரிமை மீறல்: அரசின் பதில் கோரும் இலங்கை உச்சநீதிமன்றம்

post image

கொழும்பு: இந்தியா-இலங்கை புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாததை எதிா்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது அந்நாட்டு அட்டா்னி ஜெனரல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளாா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்ம தீா்வுகளின் பகிா்வு, பல்துறை நிதியுதவி உள்ளிட்டவை தொடா்பான 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த ஏப்ரல் மாத இலங்கை பயணத்தின்போது இருதரப்புக்கும் இடையே கையொப்பமானது.

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல், அவற்றில் அரசு கையொப்பமிட்டுள்ளதாகவும், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, இலங்கை தேசியவாத குழுக்களைச் சோ்ந்த சிலா் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

இலங்கை பிரதமா், அமைச்சரவை, அட்டா்னி ஜெனரல் ஆகியோரிடம் பதில் கோரப்பட்டுள்ள இந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

விசாரணையில், இந்த மனுக்கள் தொடா்பாக அமைச்சரவையிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்களைப் பெற்று பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு அட்டா்னி ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து, மனுதாரா்கள் பதில் மனுவை ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள்... மேலும் பார்க்க

உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல்! செய்திகள் நேரலை...

தெஹ்ரானைவிட்டு வெளியேறுக!ஈரான் தலைநகர் தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமாக சூழல் நிலவுகிறது.பங்கர் - பஸ்டர் குண்டுகள் மூலம் தெஹ்... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானிலுள்ள இந்தியவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் தொ... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அ... மேலும் பார்க்க

டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் தகர்க்கப்பட்டன.ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில... மேலும் பார்க்க