செய்திகள் :

`இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

post image

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தன் நாட்டிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து தொடந்து சட்டவிரோத குடியேறிகளுடன் விமானம் பறந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அதிக ராணுவ வீரர்களை அனுப்பியிருக்கிறது. மேலும், புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த அமெரிக்க ராணுவ விமானமே பயன்படுத்தப்படுகிறது.

புலம்பெயர்ந்தவர்கள்

அதனடிப்படையில், நேற்று அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம், இந்திய சட்டவிரோத குடியிருப்பாளர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளுடன் ராணுவ விமானம் பயணிக்கும் முதல் தொலைதூர நாடு இந்தியாதான் எனக் கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``ஓர் அரசாக அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு இந்தியா தன் ஆதரவைத் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொலைபேசி வழியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போதே, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிபர் ட்ரம்ப் உரையாடியபோது, இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்றம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும், பிரதமர் மோடியுடன் குடியேற்றம் குறித்து விவாதித்ததாகவும், சட்டவிரோத குடியேறிகளை திரும்ப அழைத்துச் செல்வதில் இந்தியா சரியான முடிவெடுக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளுடன் விமானம் புறப்பட்டிருக்கிறது.

Vikatan Cartoon Row: விகடன் இணையதளம் முடக்கம்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கேலிச்சித்திரம் சம்பந்தமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நா... மேலும் பார்க்க

Vikatan Cartoon Row : The Questions Raised by Our Readers & Answers! | Detailed FAQ

The central government blocked Vikatan’s website on February 15 following a complaint from Tamil Nadu BJP President K. Annamalai over a political cartoon published in Vikatan Plus. What is the cartoon... மேலும் பார்க்க

'தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்' - மும்மொழிக் கொள்கை... சூடாகும் தமிழகம்!

சொந்த அரசியல் நலன்களுக்காக..!பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால், தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ நிதியை மத்திய நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்படி கடந்த 2023-24 கல்வியாண்டுக்கு ரூ.249 கோடி... மேலும் பார்க்க

BJP: "உபா சட்டம் முதல் விகடன் இணையதள முடக்கம் வரை... பாஜக ஆட்சியின் ஒடுக்குமுறை" - தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) இணையவழியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கிய மத... மேலும் பார்க்க