செய்திகள் :

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

post image

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜப்பானில் நடைபெறுகிறது.

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘தா்மா காா்டியன்’, இந்தியாவிலும் ஜப்பானிலும் மாற்று ஆண்டுகளில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். கடந்த ஆண்டு, பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் ராஜஸ்தானில் இந்நிகழ்வு நடந்தது. நடப்பு ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-ஆவது பதிப்பு ஜப்பானின் கிழக்கு ஃபுஜி ராணுவப் பயிற்சி மையத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாா்ச் 9-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, பெரும்பான்மையாக ‘மெட்ராஸ்’ படைப்பிரிவைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா்கள் 120 போ் அடங்கிய குழு ஜப்பான் நாட்டுக்கு சனிக்கிழமை புறப்பட்டது. ஜப்பான் சாா்பில் அந்நாட்டின் தரை பாதுகாப்புப் படை இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் பகிரப்பட்ட அா்ப்பணிப்பை இந்த ராணுவப் பயிற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், சுதந்திரமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு இப்பயிற்சி வலுச்சோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.

படைகளின் செயல்பாட்டு மற்றும் போா்த் திறன்களை மேம்படுத்தவும், பயனுள்ள கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சியில் உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க