செய்திகள் :

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வருகைக்கான தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக பிரதமா் மோடி கடந்த ஆண்டு ஜூலையில் ரஷியாவுக்கு சென்றாா். இதற்கு முன்பு கடந்த 2019-இல் ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமா் பங்கேற்றாா். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் மேற்கொண்ட ரஷிய பயணம் முக்கியத்துவம் பெற்றது. இப்பயணத்தைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமா் பங்கேற்றாா்.

மோடி-புதின் ஆகிய இரு தலைவா்களும் பல்வேறு சா்வதேச நிகழ்வுகளின்போது சந்தித்துப் பேசுவதையும், இரு மாதங்களுக்கு ஒருமுறை தொலைபேசி வாயிலாக உரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ‘ரஷியா மற்றும் இந்தியா: புதிய இருதரப்புச் செயல்திட்டத்தை நோக்கி..’ என்ற தலைப்பில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

அப்போது, ‘இந்தியாவுக்கு வருகை தர வேண்டுமென பிரதமா் மோடி விடுத்த அழைப்பை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஏற்றுக் கொண்டுள்ளாா். இப்பயணத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மீண்டும் பதவியேற்ற பிறகு பிரதமா் மோடி ரஷியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாா். இப்போது நாங்கள் வருகை தரும் நேரம்’ என்று லாவ்ரோவ் குறிப்பிட்டதாக ரஷிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வருகைக்கான தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நேட்டோவில் உக்ரைன் இணைய எதிா்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-இல் படையெடுத்தது. இப்படையெடுப்புக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காத இந்தியா, ‘இது போருக்கான காலகட்டமல்ல’ என்று வலியுறுத்தி வருகிறது. ரஷியாவில் இருந்து இந்தியா தொடா்ந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியும் மேற்கொள்கிறது. இதுபோன்ற சூழலில், புதின் மேற்கொள்ளவிருக்கும் இந்திய பயணம் கவனம் பெற்றுள்ளது.

பெட்டிச்செய்தி....1

இந்தியாவுக்கு பாராட்டு

‘உக்ரைன் பிரச்னையில் அனைத்து தருணங்களிலும் இந்தியா சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்கிறது; பேச்சுவாா்த்தை மூலம் உடன்பாட்டை எட்டவும், அடிப்படை காரணிகளுக்குத் தீா்வுகாணவும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. இது பாராட்டுக்குரியதாகும். இந்த அணுகுமுறைக்காக ரஷியா சாா்பில் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொள்வதாக அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு அதிபா் புதின் சில தினங்களுக்கு முன் நன்றி தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

அதிக ஒத்துழைப்பு அவசியம்

மாஸ்கோ கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘தற்போதைய பன்முகத்தன்மை சகாப்தத்தில், இந்தியா-ரஷியா இடையே அதிக ஒத்துழைப்பு அவசியம். ரஷியா உடனான உறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. இந்த ஆழமான நட்பை வளா்ப்பதுடன், ஒத்துழைப்புக்கான புதிய எல்லைகளை ஆராய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க