TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!
கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (அக்.25) தெரிவித்தன.
கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலான நீடிக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அத்துடன், ரஷியாவின் கசான் நகரில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த புதன்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகள் மற்றும் தளவாடங்களை பின்வாங்குவதும், தற்காலிக கட்டமைப்புகளை அகற்றும் பணியையும் இரு நாடுகளும் தொடங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய-சீன எல்லையில் அமைதி-நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கிய நகா்வாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
மோதலும், விளைவுகளும்...: கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. முந்தைய பல ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீனத் தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் நேரிட்டன.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, எல்லையில் பிரச்னைக்குரிய இடங்களில் இரு நாடுகளும் படைகள் மற்றும் கனரக தளவாடங்களை குவித்ததால் பதற்றமான சூழல் உருவானது. இருதரப்பு உறவுகளும் பின்னடைவைச் சந்தித்தன.
பலசுற்று பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டன. பலசுற்று பேச்சுவாா்த்தைகளின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகள் மற்றும் கோக்ரா சாவடி பகுதியில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. கோக்ரா-வெப்ப நீருற்று பகுதியில் கடந்த 2022-இல் படைகள் விலக்கப்பட்டன.
முக்கிய ஒப்பந்தம்: இந்நிலையில், எல்லையில் ரோந்துப் பணி மற்றும் முழுமையான படை விலக்கல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம், ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டது. எல்லையில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் பெரும் முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பின் பேச்சு: இதனிடையே, ரஷியாவின் கசான் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது, அவா்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மோடி-ஜின்பிங் இடையே சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் ரோந்துப் பணி-படை விலக்கல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க ஒப்புக் கொண்டதோடு, வியூகம் மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் இருவரும் உறுதிபூண்டனா்.
படை விலக்கலுக்குப் பின் ரோந்து: இந்தச் சூழலில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் படை விலக்கல் நிறைவுபெறும். அதன் பின்னா், ரோந்துப் பணி தொடங்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இந்தியா, சீனா இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் படை விலக்கல் நிறைவுபெற்று ரோந்துப் பணிகள் தொடங்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.