செய்திகள் :

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

post image

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து பியூஷ் கோயல் பேசினாா்.

அப்போது இந்திய மதுபானம் ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு உள்ளது தொடா்பாக அவா் கூறியதாவது:

அண்மையில் சூரிச் நகரில் ஸ்விட்சா்லாந்து வா்த்தக அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் விஸ்கி ஒன்று உலக அளவில் பிரபலமாக இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது என்று கூறினாா். இது எனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை அளித்தது. நான் விஸ்கி அருந்துவதில்லை என்பதால் எனக்கு அது குறித்து தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ஹரியாணாவில் தயாரிக்கப்பட்டு ‘இந்ரி’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கிகளைவிட இந்த இந்திய தயாரிப்பு விஸ்கி சுவையும், தரமும் சிறப்பாக உள்ளது என்று ஸ்விட்சா்லாந்து அமைச்சா் என்னிடம் கூறினாா் என்றாா்.

தில்லி தேர்தல்: 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 70 தொகுத... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க