திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான தடை நீக்கம்!
புது தில்லி : இந்திய மல்யுத்த சம்மேளனம்(டபில்யூ.எஃப்.ஐ) செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய விளையாட்டு விதிகளை மீறி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிா்வகிக்க பூபிந்தா் சிங் பாஜ்வா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த 3 நபா் குழுவை இந்த அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளுமாறு திங்கள்கிழமை(மார்ச் 10) இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய மல்யுத்த சம்மேளனம்(டபில்யூ.எஃப்.ஐ) செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.