செய்திகள் :

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்!

post image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு(ஜூன் 23) காலமானதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலமான தோஷிக்கு வயது 77. அவருக்கு கலிந்தி என்ற மனைவியும், நயன், விசாகா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

தோஷி, சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாகவே அறிமுகமானார். 1979 ஆம் ஆண்டு தனது 32 வயதில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 1986 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக விளையாடினார். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்துவந்த திலீப் தோஷி, இந்திய அணிக்காக 33 போட்டிகளில் விளையாடி 114 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளிலும் திலீப் தோஷி விளையாடியுள்ளார். 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ந்து திலீப் தோஷி, முதல் தர கிரிக்கெட்டில் சௌராஷ்டிரா, வங்காளம், வார்விக்‌ஷயர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் அணிகளுக்காக 238 போட்டிகளில் விளையாடி 898 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க... போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

ரிஷப் பந்த் தனித்துவமானவர்: கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் ரிஷப் பந்த் குறித்து பேசும்போது, “ரிஷப் பந்த் தனித்துவமானவர்” எனக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து இலங்கை வீரர் விலகல்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளைய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம்; கே.எல்.ராகுல் நம்பிக்கை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கே.எல்.ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் ந... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகாது: இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்... மேலும் பார்க்க

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க