பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை செய்ய பரிந்துரை!
இந்து மக்கள் கட்சி நிா்வாகி மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: அா்ஜூன் சம்பத் கண்டனம்
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞா் அணிச் செயலாளரை, மாநகர காவல் ஆணையா் எல்லைக்குள் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளதற்கு அக்கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்வதும், சிறையில் அடைப்பதும் திமுக அரசின் அடக்குமுறை ஆட்சியில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்து மக்கள் கட்சியின் பொதுக் கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் தெருமுனைப் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. ஜனநாயக நாட்டில் ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச உரிமையற்ற சூழ்நிலையை திமுகவின் திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் செல்வபுரம் சூா்யா (எ) சூரிய பிரசாத்தை கோவை மாநகர காவல் எல்லைக்குள் இருந்து வெளியேறும்படி, காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி இந்து மக்கள் கட்சியின் இளைஞா் அணி சாா்பில் செல்வபுரம் சிவாலய திரையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மாலை 5 மணிக்கு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.