செய்திகள் :

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

post image

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மருத்துவமனை மாணவர்கள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களில் (241+1) ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்றுடன் (ஜூன்.14) 270-ஐ நெருங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் டேவிட் வார்னர் கூறியதை சர்ச்சையாகி வருகிறது.

ஏர் இந்தியாவில் பயணிக்கமாட்டேன் - வார்னர் முடிவு

சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவினைப் பகிர்ந்த டேவிட் வார்னர், “இனிமேல் நான் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

டேவிட் வார்னர் பகிர்ந்த பதிவில் என்ன இருந்தது?

நான், ஏர் இந்தியாவின் முன்னாள் விமான குழுவினைச் சேர்ந்தவன். நான் இதில்தான் வழக்கமாகப் பயணிப்பேன். நீண்ட காலமாகவே இந்த ஏர் இந்தியா பிரச்னையில் இருக்கிறது. நிஜமாகவே பல ஆண்டுகள்.

பயணிகள், விமானிகள், என்ஜினியர்கள் என அனைவருமே இதை லாக் புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்த நிறுவனம் தனது மதிப்புமிக்க காட்விக் செக்டார் பகுதிகளில் இதற்கு மாற்றாக எந்த விமானத்தையும் வைக்கவில்லை. அதனால்தான், நாம் இந்த விமானத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளது எனக் கூறப்படிருந்தது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க