செய்திகள் :

'இனி 100% EPF பணத்தை எளிதாக எடுத்துகொள்ளலாம்' - புதிய ரூல்ஸ்கள், அதன் விளக்கங்கள்! | Q&A

post image

நேற்று முன்தினம், மத்திய அறங்காவலர் குழுவின் 238-வது கூட்டம் நடைபெற்றது.

அதில் பி.எஃப் பணத்தைப் பாதியில் எடுப்பதற்கான பல நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...

``தற்போது என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப் பணத்தைப் பாதியில் எடுக்கலாம்?"

பி.எஃப் - epf
பி.எஃப் - epf

``அனைத்து தேவை மற்றும் காரணங்களுக்காகவும் பி.எஃப் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியாது. சி.பி.டி பட்டியலிட்ட 13 காரணங்களுக்கு மட்டுமே இந்தப் பணத்தை எடுக்க முடியும்.

ஆனால், இந்த 13 காரணங்களும் மக்களுக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இதை எளிதாக்கும் வகையில் இந்த 13 காரணங்களும் தற்போது மூன்று வகைகளுக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அவை - அத்தியாவசிய தேவைகள் (மருத்துவம், கல்வி, திருமணம்), வீடு கட்டுவதற்கான அல்லது வாங்குவதற்கான தேவை, சிறப்பு சூழல்கள் (பேரிடர், வேலைவாய்ப்பு இழப்பு, பெருந்தொற்று...)

ஆக, இனி இந்தக் காரணங்களின் கீழ் பி.எஃப் பணத்தை எடுக்க முடியும்.

``பி.எஃப் பணத்தை எடுப்பதெல்லாம் 'ஓகே'; எவ்வளவு எடுக்க முடியும்?"

``பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க மூன்று காரணங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பார்த்தோம். ஒவ்வொரு காரணங்களுக்கு கீழும், இவ்வளவு சதவிகித தொகை எடுக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மொத்த தொகையையும் இனி 100 சதவிகிதம் எந்தச் சிக்கலும் இல்லாமல் எடுத்துகொள்ளலாம். இதில் பி.எஃப்பில் நீங்கள் பங்களித்திருக்கும் தொகை, உங்களது நிறுவனம் பங்களித்திருக்கும் தொகை என இரண்டுமே அடங்கும்.

உதாரணத்திற்கு, மருத்துவக் காரணங்களுக்காக, பி.எஃப் பணம் எடுக்க வேண்டுமானால், நீங்கள் பி.எஃப்பிற்கு பங்களித்துள்ள குறைந்தபட்ச தொகையை வட்டியுடன் பெற முடியும் அல்லது உங்களுடைய மாத அடிப்படை சம்பளம் மற்றும் உதவித்தொகையின் ஆறு மடங்கு பணத்தை பெற முடியும்.

இந்த மொத்த தொகையை பெறுவதில் இதற்கு முன்பு பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இனி மொத்த தொகையையும் பெறுவதில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.

இது தான் தற்போதைய லேட்டஸ்ட் அறிவிப்பின் ஹைலைட்.

பி.எஃப்
பி.எஃப்

``கல்வி மற்றும் திருமணத் தேவைக்காக எத்தனை முறை பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க முடியும்?"

``இதுவரை, கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக மொத்தமாகவே மூன்று முறை தான் பணம் எடுக்க முடியும். ஆனால், இனி கல்வித் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து 10 முறையும், திருமணத் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து ஐந்து முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம்."

``எத்தனை நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சர்வீஸில் இருந்திருந்தால் பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்கலாம்?"

``வீட்டுத் தேவைகளுக்காக பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால், இதுவரை நீங்கள் 5 ஆண்டுகள் சர்வீஸில் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது எந்தக் காரணத்திற்காக பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானாலும், 12 மாதங்கள் சர்வீஸில் இருந்திருந்தாலே போதுமானது."

``சிறப்பு சூழலுக்கு கீழ் பணம் எடுக்க வேண்டுமானால் இப்போது எதாவது சலுகை கொடுக்கப்பட்டுள்ளதா?"

``முன்பு, இந்தக் காரணத்தின் கீழ், பி.எஃப்பில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால், அந்தக் குறிப்பிட்ட காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இனி இது தேவையில்லை. சிறப்பு சூழலின் கீழ், காரணத்தைத் தெரிவிக்காமலேயே பணம் எடுக்க முடியும். "

பி.எஃப்
பி.எஃப்

``பி.எஃப்பில் இருந்து மொத்தப் பணத்தையும் எடுக்க முடியுமா?"

```நிச்சயம் முடியாது. தற்போதைய அறிவிப்பின் படி, நீங்கள் பி.எஃப் கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவிகித தொகையை வைத்திருக்க வேண்டும்.

அப்போது தான் அந்தப் பணத்தையும், அதற்காக கிடைக்கும் 8.25 சதவிகித வட்டியையும் ஓய்வுக்காலத்தில் அனுபவிக்க முடியும்."

``பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க எதாவது ஆவணம் தேவையா?"

``இனி பி.எஃப் பணத்தை எடுக்க எந்தவொரு ஆவணமும் தேவையில்லை. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் தொகையும் 100 சதவிகிதம் ஆட்டோ சென்டில்மென்ட் அடிப்படையில் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்."

``ப்ரீ- மெச்சூர்ட் ஃபைனல் செட்டில்மென்ட் மற்றும் பென்சனில் ஏதேனும் மாற்றம் உண்டா?"

``முன்பு, ப்ரீ- மெச்சூர்ட் ஃபைனல் செட்டில்மென்ட்டில், பி.எஃப் தொகையை இரண்டு மாதங்களிலேயே எடுத்துகொள்ள முடிந்தது. ஆனால், இனி 12 மாதங்கள் இதற்காக காத்திருக்க வேண்டும்.

பென்சனை பெறவும் 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும்".

தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த ஓராண்டு காலத்தில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் இந்த ஆண்டு தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பார்கள். ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இந்தத் தீபாவளியை சிறப்பாகக்... மேலும் பார்க்க

சென்னை அதிகரிக்கும் பிசிக்கல் வெள்ளி தட்டுப்பாடு; லண்டனில் அதிரடி நகர்வு - என்ன தான் நடக்கிறது?

தங்கம் விலையேற்றம்போல, வெள்ளி விலையும் தினம் தினம் எகிறி வருகிறது. சொல்லப்போனால், தங்கத்தைவிட, வெள்ளி விலையேற்றம் மிக வேகமாக உள்ளது.'ஆனால், இப்போது வெள்ளியை வாங்க வேண்டாம்' என்ற அறிவுரையையும், அதற்கான... மேலும் பார்க்க

தங்கத்தைத் தாண்டி பெண்கள் எதில், எப்படி முதலீடு செய்யலாம்? | Labham

சிக்கனம், சேமிப்பு என்று வந்தால், நம் பெண்களை உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது. கணவர் எவ்வளவு குறைவாக சம்பாதித்து வந்தாலும், அதற்கு வீட்டுக்குத் தேவையான செலவுகளை செய்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு... மேலும் பார்க்க

Money Talks: பணத்தைப் பல மடங்கு பெருக்கும் பக்கா வழி; 70% பேருக்குத் தெரியாத உண்மை என்ன?

நம் வாழ்க்கையில் டாடா, பிர்லா மாதிரி பல ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒன்று, இரண்டு கோடி ரூபாயையாவது சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படத்தான்... மேலும் பார்க்க

தீபாவளி போனஸ் வந்துடுச்சா? அந்தப் பணத்தில் 'இதை' வாங்கிவிட்டால், உங்கள் குடும்பமே சேஃப்

இந்நேரத்திற்கு பெரும்பாலானவர்களுக்கு போனஸ் கையில் கிடைத்திருக்கும். அதை வைத்து துணிமணி வாங்கலாம்... பட்டாசு வாங்கலாம்... மொபைல் போன் வாங்கலாம் என்று ஏகப்பட்ட ஷாப்பிங் லிஸ்டை பிளான் செய்திருப்பீர்கள். ... மேலும் பார்க்க

பான் கார்டால் ஏற்பட்ட குழப்பம்; சென்னை பக்கமே வராத ஒருவருக்கு சென்னையில் கடன் - பின்னணி என்ன?

சென்னையிலேயே இதுவரை வசிக்காத ஒருவருக்கு, சென்னையில் லோன் எடுத்ததாக சிபில் காட்டுகிறது என்ற உண்மை சம்பவம் ஒன்றை பகிர்கிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன். "என்னுடைய கிளைன்ட் ஒருவர் பெங்களூரில் வசிக்கிறார்... மேலும் பார்க்க