செய்திகள் :

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

post image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம் ஞாயிற்றுக்கிழமை விழாக்கோலம் பூண்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6}ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7 }ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

இரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி, திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதிகாலை 5.25 முதல் 6.10 மணிக்குள் குடமுழுக்கு: குடமுழுக்கை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம், 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு தங்கக் குடத்தில் பிரதான கலசம் யாகசாலையிலிருந்து புறப்பாடாகிறது. கோயில் ராஜகோபுரத்தின் ஏழு கலசங்கள், கோவர்தனாம்பிகை அம்மன் விமானம், வல்லப கணபதி விமானம், பசுபதீஸ்வரர் கோயில் விமானம் ஆகியவற்றில் சிவாசாரியர்கள் சிறப்பு பூஜை செய்த பிறகு, ஒரே நேரத்தில் அதிகாலை 5.10 முதல் காலை 6.10}க்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி, பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று, இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்திலும், கோவர்தனாம்பிகை அம்மன் ரிஷப வாகனத்திலும் வீதி உலாவுக்கு எழுந்தருளுகின்றனர்.

மதுரையிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் வருகை: குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தனர். அப்போது, சுவாமிகளுக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை தரிசனத்துக்கு ஏற்பாடு: கோயிலில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு நடை அடைத்து, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை திறந்திருக்கும். குடமுழுக்கையொட்டி, திங்கள்கிழமை காலை 7 மணி முதல் இரவு வரை தொடர்ந்து கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில், 10 இடங்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டு, நடமாடும் கழிப்பறை, குடிநீர் வாகனங்கள், நடமாடும் மருத்துவமனைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிரசாதப் பை: குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி சார்பில், மூலவர் சுப்பிரமணிய சுவாமி படம், மஞ்சள் கயிறு, குங்குமம், இனிப்பு கொண்ட பிரசாதப் பை வழங்கப்பட உள்ளது.

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி.-எம்எல்ஏக்களின் ஊழல் வழக்கு: விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ... மேலும் பார்க்க