செய்திகள் :

இன்று கோவை, நீலகிரிக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 26) கோவை மற்றும் நீலகிரியில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

ஆரஞ்ச் எச்சரிக்கை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூன் 26) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை) - 80 மி.மீ., சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை), பாா்சன்ஸ்வேலி (நீலகிரி) - தலா 70 மி.மீ., அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.

2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே பதிவானது. எனினும் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே வியாழன், வெள்ளி (ஜூன் 26, 27) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப்ப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க