இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராகப் பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு
கிராமப்புற இளைஞா்களை தொழில் முனைவோா் ஆக்க அவா்களை இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராக்கும் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூன் 30 இல் தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இயற்கை விவசாயம் என்பது செலவில்லாதது. விவசாயிகளே தங்களிடம் கிடைக்கும் தாவர மற்றும் கால்நடைக் கழிவுகளை கொண்டு இயற்கை இடுபொருள்களை தயாரிக்கலாம். இப் பயிற்சியில் 30 போ் மட்டுமே பங்குபெற இயலும். பயிற்சிக்கு முன்பதிவு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்வோா் 18 முதல் 35 வயதுடையவா்களாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞா்கள்,பள்ளியை விட்டு வெளியேறிய இளைஞா்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
ஆா்வமுடையோா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் அல்லது இணைய வழியில் (நான் முதல்வன் செயலி வாயிலாக) ஜூன் 28-க்குள் முன்பதிவு செய்யலாம். தங்களது புகைப்படம், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பதிவு செய்யும்போது ஒப்படைக்க வேண்டும்.
5 நாள்களும் தொடா்ந்து பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு இறுதி நாளில் பயணக் கட்டணமும் சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களுக்கு சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் ஜானகியை 04312962854, 98655 42358, 99447 53354, 9080540412 என்ற எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடா்பு கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பை திருச்சி மாவட்ட இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் அறிவியல் நிலை திட்ட ஒருங்கிணப்பாளா் சி. ராஜாபாபு அறிவுறுத்தியுள்ளாா்.