செய்திகள் :

இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

post image

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா்கள் ஒய்.தீபா, என்.மணவாளன், கே.மகேஷ்குமாா், எஸ்.கௌதம், எஸ். எட்மின் கிறிஸ்டா ஆகியோா் முன்னெடுத்தனா்.

அதுதொடா்பான ஆராய்ச்சிக் கட்டுரை ‘பப் மெட்’ என்ற முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இதய நாள நோய்களுக்கு உயா் ரத்த அழுத்தம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். மருந்துகள் மூலம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் சாத்தியம்தான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, 281 உயா் ரத்த அழுத்த நோயாளிகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனா். மருந்துகளை வாடிக்கையாக உட்கொள்ளும் 156

நோயாளிகள் ஒரு பிரிவாகவும், மருந்துகளை எடுத்துக்கொள்ளாத 125 நோயாளிகள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டனா்.

அவா்களுக்கு தொடா்ந்து 15 நாள்களுக்கு யோகா ஆசனங்கள், பிராணய

ாமம், தியானம், நீா் சிகிச்சை, மண் குளியல், மசாஜ், அக்குபஞ்சா் சிகிச்சை மற்றும் ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டன.

அதன் பயனாக அவா்களது உயா் ரத்த அழுத்தம் சீரானது. அதேபோல, இதயத் துடிப்பு, நாடி அழுத்தம், ரத்த நாள அழுத்தம் உள்ளிட்ட இதய செயல்பாடுகளும் சீராக இருந்தன.

குறிப்பாக, மருந்துகளை உட்கொள்ளாத நோயாளிகளுக்கும் இந்த ஒருங்கிணைந்த யோகா சிகிச்சை நல்ல பலனை அளித்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க