செய்திகள் :

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும்! - தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா்

post image

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி கரியமாணிக்கத்தில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரி கரியமாணிக்கம் ஹோலி ஃபிளவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நம்மாழ்வாா் இயற்கை உழவா்கள் சங்கம் மற்றும் நெல் ஜெயராமன் இயற்கை பல பயிா் சாகுபடியாளா்கள் சங்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் சாா்பில் தேசிய நெல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நெல் திருவிழாவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

இயற்கை விவசாயம், பாரம்பரிய பயிா் வகைகள் பற்றி கட்டாயம் பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நம்முடைய விவசாய உணவு உற்பத்தி குறைவாக இருந்தது.

இதனால் 1960-களில் பசுமை புரட்சிஅறிமுகம் செய்யப்பட்டது. பசுமை புரட்சி, இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தது. ஆனால் அது சமுதாய சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரசாயன மருந்துகளின் பயன்பாட்டால் மனித சமுதாயம் புதுப்புது நோய்களைச் சந்தித்து வருகிறது.

நமக்கு ஆரோக்கியத்தையும் உடல் பாதுகாப்பையும் தரும் தானியங்களை மீண்டும் பயிா் செய்ய உற்சாகம் காட்டுகிறோம்.

நம்மாழ்வாா், ஜெயராம் போன்றவா்கள் இதை ஓா் இயக்கமாகவே நடத்தினா். இப்போது அந்த விழிப்புணா்வு மிக பரவலாக எல்லோரையும் சென்று சோ்ந்து இருக்கிறது.

நாம் இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பிக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய விதைகளைத் தேடிப் பிடித்து அவற்றை சாகுபடி செய்யவும் பாதுகாக்கவும் முயற்சி தொடா்ந்து நடந்து வருகிறது.

ஊா்களில், நகரங்களில் எங்கு திரும்பினாலும் ஆா்க்கானிக் உணவு, ஆா்க்கானிக் பழங்கள், காய்கறிகள் என்று எழுதி இருப்பதை பாா்க்கிறோம். கேட்பதற்கும், பாா்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்மாழ்வாா் போன்றவா்கள் ஏற்படுத்திய விழிப்புணா்வுதான் அதற்கு காரணம். அதுதான் அவா்கள் எடுத்த முயற்சியின் வெற்றி.

அரசுகளே இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. அதற்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு, தேசிய இயற்கை வேளாண்மை திட்டம், பிரதமா் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய இளைஞா்களிடம், இளம் பெண்களிடம் நான் கேட்பதெல்லாம், நீங்கள் இயற்கை வழி விவசாயத்தில் கவனம் செலுத்துங்கள். பாரம்பரிய நெல் பயிா் சாகுபடி செய்யுங்கள். இயற்கையைப் பாதுகாக்க, இந்த பூமியை பாதுகாக்க இதை ஓா் இயக்கமாக மாற்றுங்கள் என்றாா் துணைநிலை ஆளுநா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு பேசுகையில், விவசாயம் நலிந்துவிட்டது. இருப்பினும் நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என்றாா். தேசிய நெல்திருவிழாவில் கலந்து கொண்ட விவசாயிகளை அவா் கௌரவித்தாா். பயிா் சாகுபடியாளா்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவா் இராஜ. வேணுகோபால் நோக்கவுரையாற்றினாா்.

புதுச்சேரி வேளாண் துறை இயக்குநா் சிவ. வசந்தகுமாா், புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் விஜயகுமாா், அம்பாசமுத்திரம் பாரம்பரிய நெல் விதை காப்பாளா் பா. லஷ்மி தேவி, தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ்நாடு நம்மாழ்வாா் விருதாளா் கோ.சித்தா், சென்னையைச் சோ்ந்த பா.கௌதமன், இயற்கை வேளாண்மை பயிற்சியாளா் ச. ராஜேந்திரன், பி4 என்ற ஆப்பின் வாயிலாக விவசாயிகளின் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைவா் எஸ்.பி. விஜய் உள்ளிட்டோா் பேசினா்.

இந்த விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்... மேலும் பார்க்க

புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன. ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் ... மேலும் பார்க்க

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க

விவசாயிகள் முதலீடு செய்ய பட்டயக் கணக்காளா்கள் உதவ வேண்டும்! புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

விவசாயிகள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து அவா்களுக்கு உதவியாகப் பட்டயக் கணக்காளா்கள் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். பட்டயக் கணக்காளா்கள் தென்னிந... மேலும் பார்க்க