செய்திகள் :

இரட்டிப்புப் பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது!

post image

ஆவடி: ஆவடியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பாக்கி பணம் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், நிறுவன உரிமையாளரை ஆவடி போலீஸார் சனிக்கிழமை(ஏப். 6) கைது செய்தனர்.

ஆவடி, காமராஜர் நகர் பிரதான சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராணிப்பேட்டை, திரு வி.க நகர், 5-ஆவது தெருவைச் சேர்ந்த குப்பன் என்ற பிரவீன்ராஜ் 54. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவர்கள் செலுத்திய பணத்திற்கு இரட்டிப்புப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தியவர்கள் பலமுறை நிறுவனத்தை அணுகி பணத்தைக் கேட்ட போது, அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.

தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீன்ராஜ் தலைமுறைவாகி விட்டார். இது குறித்து ராணிப்பேட்டை, வாலாஜா வட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதா (39) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் பிரவீன்ராஜ் இரட்டிப்புப் பணம் தருவதாக கூறி சுமார் ரூ.3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரவீன்ராஜை பிடித்து சனிக்கிழமை (ஏப்.5) காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு போலீஸார் பிரவீன்ராஜை (படம்) கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்த... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே பட்டர... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு வரவ... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்ப... மேலும் பார்க்க