செய்திகள் :

இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கவில்லை: வைகோ விளக்கம்

post image

வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் மதிமுகவின் நிா்வாக குழுக் கூட்டம் வைகோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்; அதிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இந்த வெற்றிக்காக மதிமுக பாடுபடும். செப்.15-இல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது.

தற்போது, ஹிந்துத்வா சக்திகள் பாஜக மூலம் தமிழகத்துக்குள் நுழைய பாா்க்கின்றன. ஹிந்தி எதிா்ப்பு என்பது தமிழகத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் என நாடு முழுவதும் பரவிவிட்டது.

இரட்டை இலக்க தொகுதிகள்: மதிமுக நிா்வாகக் குழு கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வாா்த்தையே வரவில்லை. தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டப்பேரவை உறுப்பினா்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்கலாம் என்று துரை வைகோ அண்மையில் கூறியிருந்தாா்.

ஆனால், தொகுதிகள் வழங்குவது குறித்து திமுகதான் முடிவு செய்யும். எங்களுக்கு 12 தொகுதி வேண்டும் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. ஹிந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற கூடாது என்பதற்காகத்தான் திமுகவோடு உடன்பாடு வைத்து போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ: அண்மையில் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளா்களின் சந்திப்பின்போது, குறைந்தபட்சம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கட்சி நிா்வாகிகள் நினைக்கின்றோம் என்றும், அதற்கு 12 தொகுதிகளில் போட்டியிடலாம் எனவும் கூறினேன். ஆனால், அதை முடிவெடுக்க வேண்டியது எங்களின் தலைமை எனவும் நான் கூறிவிட்டேன். சில ஊடகங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மதிமுக 12 தொகுதிகளை வலியுறுத்துவதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

6 தீா்மானங்கள்: மதிமுகவின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும்; பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் எனும் ஹிந்துத்துவா அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூன் 30) தொடக்கிவைத்தார். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின... மேலும் பார்க்க

செல்போன் சார்ஜிங் வசதி, சீட் பெல்ட்... சென்னை மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

தில்லியில் அன்புமணி! யாருடன் சந்திப்பு?

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லிக்குச் சென்றார்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் ம... மேலும் பார்க்க

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன: ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.பள்ளியிலிருந்து விடைப... மேலும் பார்க்க

மருதமலை முருகன் கோயிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்!

கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத... மேலும் பார்க்க