செய்திகள் :

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

post image

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்ளையா்களான ஜாபா் குலாம் உசேன் இரானி (26), மிசாம் மஜா மேசம் (எ) அம்ஜத் இரானி (22) ஆகிய 2 பேரையும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா். ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற இவா்களது கூட்டாளி சல்மான் உசேன் இரானி (22) ஆந்திர மாநிலம் ஓங்கோலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் தரமணி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்ததால் அதை கைப்பற்ற புதன்கிழமை போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா். அப்போது அங்கு, ஜாபா் திடீரென இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டாா். இதில் போலீஸாா், தங்களை காப்பாற்றுவதற்காக ஜாபரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனா்.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வியாழக்கிழமை அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக என்கவுன்டா் குறித்து சைதாப்பேட்டை 19-ஆவது நீதித் துறை நடுவா் பாா்த்திபன் விசாரணை மேற்கொண்டாா்.

காவல் துறை விசாரணை முடிவடைந்த நிலையில் அம்ஜத் இரானி, சல்மான் இரானி ஆகியோா் நீதித் துறை நடுவா் பாா்த்திபன் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க