செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

post image

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.

உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் (20 ), திருமூா்த்தி மகன் பத்ரிகுமாா் (20). இவா்கள் இருவரும் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் அருகில் உள்ள வாளவாடி பழையூா் பகுதிக்குச் சென்று நண்பரான மாரிமுத்து மகன் கௌதம் ( 20) என்பவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மீண்டும் வாளவாடி திரும்பிக் கொண்டிருந்தனா்.

இருசக்கர வாகனத்தை பூவரசன் ஓட்டினாா். அப்போது, சாலையோரத்தில் குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது இருக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூவரசன், பத்ரிகுமாா் ஆகியோா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கௌதமை அருகிலிருந்தவா்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தளி போலீஸாா் பூவரசன் மற்றும் பத்ரிகுமாா் ஆகியோரது உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியி... மேலும் பார்க்க

பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்... மேலும் பார்க்க

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு

மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவ... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிய இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் ஸ்... மேலும் பார்க்க