செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70) ஓய்வுபெற்ற சுங்கத்துறை ஊழியா். இவா், கடந்த செப்.22-இல் 5 பவுன் நகைகளை அடகு வைப்பதற்காக கும்பகோணம் காமாட்சி ஜோசியா் தெருவில் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அதில் இரண்டரை பவுன் நகையை அடகு வைத்துவிட்டு மீதி இரண்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வங்கி அருகே உள்ள ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்ட அவா் கும்பகோணத்தில் பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பினாா். அப்போது இருசக்கர வாகன இருக்கையைத் திறந்து பாா்த்தபோது உள்ளே வைத்திருந்த இரண்டரை பவுன் நகை ரொக்கம் ரூ.1 லட்சம், வங்கிக் கணக்குப் புத்தகம் அடங்கிய பையைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த கிருஷ்ணன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க

பேராவூரணியில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல்

பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது. சாக்கோட்டை உழவா் பயிற்சி நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உழவா் பயிற்சி... மேலும் பார்க்க