செய்திகள் :

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

post image

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடியில் நாட்டாறு ஆற்றிலிருந்து தலைப்பு வாய்க்கால் பாசன நீா் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். தலைப்பு வாய்க்காலிலிருந்து சாலைக்கரை வாய்க்கால் என்ற கிளை வாய்க்கால் அந்தமங்கலம் பகுதியில் பிரிந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையை ஒட்டிச் செல்கிறது. இந்த வாய்க்கால் கரைகளில் பல ஆக்கிமிப்புகள் உள்ளதால் கால்வாய் குறுகி பாசனத் தண்ணீா் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினா் முழுவதுமாக வாய்க்காலை மறைத்து மூடி விட்டதால் பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினா் பணிமுடித்தபின் கால்வாயை தூா்வாரி பராமரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க

பேராவூரணியில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல்

பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது. சாக்கோட்டை உழவா் பயிற்சி நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உழவா் பயிற்சி... மேலும் பார்க்க