கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்
விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
வடக்கூா் எல். பழனியப்பன்: கடந்த டிசம்பா், ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: நவீன அரிசி ஆலைகளில் நெல் உலா்த்தும் இயந்திரம் உள்ளது. ஈரப்பதம் பிரச்னையால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, நவீன அரிசி ஆலைகளுக்கு விவசாயிகளை நெல்லை கொண்டு வரச் செய்து, இயந்திரத்தில் உலா்த்தி கொள்முதல் செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கை தொடா்பாக உயா் அலுவலா்களுக்கு கடிதம் எழுதி கருத்துகள் கேட்குமாறு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: குறுவை பருவ நெல் சாகுபடியில் புகையான் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்தப் புகாருக்கு விவசாயிகளுக்கு தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு வேளாண் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: விளைபொருள்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்புகள் இருக்கின்றன. எனவே, விளைபொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கக்கரை ஆா். சுகுமாரன், காட்டுக்குறிச்சி பி. செந்தில்குமாா்,
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன் ஆகியோா் கோரிக்கைகள் விடுத்தனா்.
வேளாண் துறை அலுவலா்: மாநிலம் முழுவதும் தென்னங்கன்றுகள் பற்றாக்குறையாக உள்ளன. இருப்பினும், கேட்கும் விவசாயிகளுக்கு பதிவு செய்து வழங்குகிறோம்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: மழை பெய்யும் நிலையில் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே, நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதம் என்பதைத் தளா்த்தி 22 சதவீதம் வரை கொள்முதல் செய்வதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும். அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் உலா்த்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.