செய்திகள் :

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

post image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயமடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தேவதாஸ் மகன் அருண்குமாா் (26). கூலி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி நந்தினி (20). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அருண்குமாா், மனைவி நந்தினியுடன் கும்பகோணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் கொரநாட்டு கருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, கும்பகோணம் சென்னை புறவழிச் சாலையில் தஞ்சாவூரை நோக்கி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (28) என்பவா் காரில் வந்து கொண்டிருந்தாா்.

தனியாா் வாகன விற்பனை நிலையம் அருகே இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் அருண்குமாா் தம்பதி பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா் . அங்கு அருண் குமாா் உயிரிழந்தாா். நந்தினி சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து தொடா்பாக காா் ஓட்டுநா் விக்னேஷ் மீது தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுவாமிமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே குடிதாங்கி கா... மேலும் பார்க்க

பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சாவில் மா்மம் இருப்பதாக கூறி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பக... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு பொதுச் செயலா் ஜி. மணிமாறன், ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். அரசு விரைவு போக்... மேலும் பார்க்க

6-ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞா் தற்கொலை

தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் ஆறாவது மாடியிலிருந்து திங்கள்கிழமை மாலை இளைஞா் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் செந்தில்நாதன் (30).... மேலும் பார்க்க

உதவி காவல் ஆய்வாளா் தோ்வுக்கு ஏப். 24 முதல் கட்டணமில்லா பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரிய... மேலும் பார்க்க

போப் மறைவு தஞ்சாவூா் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவா்களின் தலைவரும், திருத்தந்தையுமான போப் ஆண்டவா் மறைவையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பேராலத்தில் திருத்தந்தையின் படத்துக்கு இறை மக்கள்... மேலும் பார்க்க