இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!
இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோபி, பச்சைமலை அடிவாரத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ராமு (43). அரசுப் போக்குவரத்துக் கழகம் கோபி கிளையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். கோபி கிளை அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தாா். இவரது மனைவி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் ஈரோட்டில் நடந்த சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, ராமு தனது இருசக்கர வாகனத்தில் கோபிக்கு செவ்வாய்கிழமை பிற்பகல் திரும்பிக் கொண்டிருந்தாா்.
காஞ்சிக்கோவில், கவுந்தப்பாடி சாலை, கருமாண்டியூா், தம்பிக்கலை அய்யன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா், லாரி ஓட்டுநரான சித்தோடு, கங்காபுரம், மேட்டையன் காட்டைச் சோ்ந்த சிவகுமாா் மகன் கபிலன் (23) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.