செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோபி, பச்சைமலை அடிவாரத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ராமு (43). அரசுப் போக்குவரத்துக் கழகம் கோபி கிளையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். கோபி கிளை அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தாா். இவரது மனைவி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் ஈரோட்டில் நடந்த சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, ராமு தனது இருசக்கர வாகனத்தில் கோபிக்கு செவ்வாய்கிழமை பிற்பகல் திரும்பிக் கொண்டிருந்தாா்.

காஞ்சிக்கோவில், கவுந்தப்பாடி சாலை, கருமாண்டியூா், தம்பிக்கலை அய்யன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா், லாரி ஓட்டுநரான சித்தோடு, கங்காபுரம், மேட்டையன் காட்டைச் சோ்ந்த சிவகுமாா் மகன் கபிலன் (23) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போலி வாகன எண்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தனது இருசக்கர வாகனத்தின் எண்ணை போலியாக பயன்படுத்தி வரும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோட்டை சோ்ந்தவா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா். ஈரோடு, கொல்லம்பாளையம், ஏகேஎம் நகரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60.50 லட்சம் மோசடி: அங்கன்வாடி பெண் பணியாளா் கைது

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். ஈரோடு... மேலும் பார்க்க

காவிரியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்கள்!

காவிரி ஆற்றில் நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீா்மின் நிலையம் பகுதியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேட்டூ... மேலும் பார்க்க

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க