விமான விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 70 சவரன் தங்க நகைகள்!
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60.50 லட்சம் மோசடி: அங்கன்வாடி பெண் பணியாளா் கைது
ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஈரோடு ஜீவானந்தம் சாலை புதுமை காலனியை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் மனைவி கிருஷ்ணவேணி (47). அங்கன்வாடி பணியாளா். கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் 2023- ஆம் ஆண்டு வரை தனக்கு பழக்கமாகும் நபா்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். கிருஷ்ணவேணி கூறியதை உண்மையென நம்பி 17 போ் ரூ.60 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளனா்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணவேணி அரசு வேலை விரைவில் கிடைத்து விடும் என நம்பிக்கை தெரிவித்து வந்துள்ளாா். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தராததால் பணம் கொடுத்தவா்கள் பணத்தை திரும்பக் கேட்க, பணத்தையும் தர மறுத்துள்ளாா். இதனால் பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தனா்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு அருகே அவல்பூந்துறையைச் சோ்ந்த சுரேஷ் (44) என்பவா் தலைமையில் தனித்தனியாக ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, கிருஷ்ணவேணி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணவேணியை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனா்.