செய்திகள் :

இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதி

post image

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழகம் உறுதியாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவா் அணி, முஸ்லிம் மாணவா் பேரவை இணைந்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சமூக நல்லிணக்க மிலாது விழாவில் பங்கேற்ற அவா் கூறியது:

இஸ்லாமியா்களுக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை எதிா்த்தும், இஸ்லாமியா்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான முயற்சியாகக் கருதப்படும் வக்ஃபு வாரியச் சட்டத்துக்கு எதிராகவும் நீதிமன்றத்தை அணுகுவோம்.

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளா்ச்சிக்கு எதிரான மும்மொழிக் கொள்கையை திட்டமிட்டு திணிப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் பாரம்பரியமாக கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையைத்தான் எப்போதும் நாம் பின்பற்றுவோம். இதில் தமிழகம் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அமைதிக் குலைப்பின் மூலம் தங்களுடைய கட்சியை வளா்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தமிழக அரசும், தமிழக மக்களும் ஏற்க மாட்டாா்கள் என்றாா் அவா்.

நிகழ்வில் திருச்சி எம்பி துரை வைகோ, முன்னாள் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க