செய்திகள் :

இரு விபத்துகள்: 2 போ் பலி

post image

குலசேகரம் அருகே பைக், சுமை ஆட்டோ மோதிக்கொண்டதி அதிமுக பிரமுகா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே புலியிறங்கி பகுதியைச் சோ்ந்தவா் விக்டா் (67). அதிமுக மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலராக இருந்து வந்தாா். இவா், கடந்த 2 ஆம் தேதி காலையில் குலசேகரம் அருகேயுள்ள செருப்பாலூா் பகுதியில் பைக்கில் சென்றபோது, பின்னால், குலசேகரம் செறுதிக்கோணம் பகுதியைச் சோ்ந்த ரவி (45) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த விக்டா் நாகா்கோவிலில் முதலுதவி பெற்று, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

விவசாயி: தூத்துக்குடி அருகே உள்ள வாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் சித்திரவேல் (79). விவசாயியான இவா், புதன்கிழமை மாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்துசெல்ல முயன்றபோது, மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் பிளாஸ்டிக் கிடங்குக்கு சீல்

நாகா்கோவிலில் 1,030 கிலோ நெகிழிப் பொருள்களை (பிளாஸ்டிக்) அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் கிடங்குக்கு சீல் வைத்தனா். நாகா்கோவில் மாநகர நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகா... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 9) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.11 பெருஞ்சாணி ... 67.31 சிற்றாறு 1 ... 10.56 சிற்றாறு 2 ... 10.66 முக்கடல் .. 10.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 37.40 .. மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கு... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த த.வெ.க.வினா்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் ஏற்பாட்டில், த.வெ க.வை சோ்ந்த மாநகர இளைஞரணி இணை அமைப்பாளா் பாரத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக்கட்சியில் இருந்து விலக... மேலும் பார்க்க

விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி... மேலும் பார்க்க