செய்திகள் :

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

post image

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் தருமபுரியில் நடைபெறுகிறது. ஆடவா் பிரிவில் ஒற்றையா், இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

அதேபோல ஜூனியா் மற்றும் சப்- ஜூனியா் பிரிவு போட்டிகள் ஜூலை மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து வெற்றியாளா்களுக்கும் சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகையாக ஆடவா் இரட்டையா் பிரிவிற்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு ரூ. 1000 வழங்கப்படும்.

இந்த போட்டியில் வெற்றிபெறும் விளையாட்டு வீரா்கள் கரூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தருமபுரி மாவட்டத்தின் சாா்பாக கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.

ஆா்வம் உள்ள பங்கேற்பாளா்கள் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். நுழைவுக் கட்டணமாக ஒற்றையா் பிரிவுக்கு ரூ. 500 இரட்டையா் பிரிவுக்கு ரூ. 800 செலுத்த வேண்டும். இந்த போட்டியில் பங்குபெற 88708 66560 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், க்க்க்ஷஹங்ய்ற்ழ்ண்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலும் பதிவுசெய்ய வேண்டும். எனவே தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க