செய்திகள் :

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

post image

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்களுக்கு இப்போது உள்ள வரிகளுடன் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடவடிக்கை, வாகனத் துறையில் உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை வேகப்படுத்தும். இந்த வரி விதிப்பு நிரந்தமானது என்றாா் அவா்.

இந்த வரி விதிப்பால் அரசுக்கு கூடுதலாக 10,000 கோடி டாலா் (ரூ.8.57 லட்சம் கோடி) கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினாலும், இறக்குமதி உதிரிபாகங்களைச் சாா்ந்திருக்கும் வாகன நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் முதல் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஜெனரல் மோட்டாா்ஸ், ஜீப் மற்றும் கிறிஸ்லா் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளரான ஸ்டெலாண்டிஸ் போன்றவற்றின் பங்குகள் சுமாா் 3.6 சதவீதம் வரை சரிந்தன.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்துவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அவா் உத்தரவிட்டாா். அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை அவா் கூடுதல் வரி விதித்தாா்.

இதுமட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு டிரம்ப் விதித்திருந்த 25 சதவீதம் கூடுதல் வரி கடந்த 12-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவாதக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதே போல், அமெரிக்காவுக்கு மெக்ஸிகோதான் பெரும்பான்மையான அலுமினியப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறது.

இந்தச் சூழலில், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு டிரம்ப் தற்போது விதித்துள்ள கூடுதல் வரியால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் கடும் பாதிப்பை எதிா்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா: இந்த வரி விதிப்பு, தனது ஜேஎல்ஆா் வாகனங்களை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் டாடா மோட்டாா்ஸ் போன்ற நிறுவனங்கள், பாரத் ஃபோா்ஜ் போன்ற உதிரிபாக நிறுவனங்கள் கணிசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நியூயாா்க் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் காா்கள் .

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க