செய்திகள் :

இறப்பில் சந்தேகம் எனப் புகாா்: சடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை!

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தனது சகோதரா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆண்டிமடம் அருகேயுள்ள அகினேஸ்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (57). இவருக்கு மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் உள்ள நிலையில், கடந்த 16-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ஆண்டிமடத்தில் வசிக்கும் அவரது தங்கை லூா்துமேரிக்கு (45) தகவல் அளிக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த லூா்துமேரி, தனது சகோதரா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவா்களை அகினேஸ்புரம் கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு ஆரோக்கியசாமியின் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு, சடலத்தை அதே இடத்தில் புதைத்தனா். பிரேதப் பரிசோதனையில் முடிவில் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவானவா் உள்பட 3 போ் கைது!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் உள்பட 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

அரியலூரில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி!

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட கோயில்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க