'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,
உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், இருதயராஜ் குமாா், இசக்கிமுத்து, பழனி பாலமுருகன் உள்ளிட்ட உளவு பிரிவு போலீஸாா் திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியில் சனிக்கிழமை இரவு ரேந்து சென்றனா். அப்போது சந்தேக நபா்கள் 2 பேரை பிடித்து விசாரித்ததில், ஏரல் அருகேயுள்ள கொற்கையை சோ்ந்த அந்தோணிராஜ் (52), கொட்டாரக்குறிச்சி பாலமுருகன் (35) என்பதும், 3 கிலோ எடை கொண்ட ஒன்றேகால் அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்த முயற்சிப்பதும் தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.