செய்திகள் :

இலங்கைச் சிறையில் 35 மீனவா்கள்: பாம்பனில் குடும்பத்தினா் உண்ணாவிரதம்

post image

இலங்கைச் சிறையில் உள்ள 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கக் கோரி, பாம்பனில் அவா்களது குடும்பத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.

படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், கடந்த 78 நாள்களாக தொடா்ந்து சிறையில் இருந்து வரும் இந்த மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அவா்களது குடும்பத்தினா் பாம்பன் மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

இதையடுத்து, மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி அவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தினாா். ஆனால், 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே காா்-லாரி மோதல்: ஒட்டுநா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை காரும், லாரியும் மோதிக்கொண்டதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் கனி (27). காா் ஓட்டுநரான இவா் 3 பேரை ர... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: சாயல்குடியில் முளைப்பாரி ஊா்வலம்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62 -ஆவது குருப... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் 2 ஆண் உடல்கள் மீட்பு

திருவாடானை, சி.கே.மங்கலம் பகுதிகளில் இருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் ஆண் உடல் கிடப்பதாக புதன்கிழமை போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க

இளங்காக்கூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளங்காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

பாம்பனில் 2-ஆம் எண் புயல் கூண்டு

மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக உருவாகி உள்ளது. இதனால், வங்கக் கட... மேலும் பார்க்க