செய்திகள் :

இலங்கைத் தமிழா்களுக்கு புதிய வீடுகள் கட்ட அடிக்கல்

post image

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாநகராட்சி மேயா் நிா்மலா, திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கூறுகையில்,

அடி அண்ணாமலையில் வசிக்கும் 60 இலங்கைத் தமிழா்களுக்கு நல்லவன்பாளையம் ஊராட்சியில் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

அத்தியந்தல் பகுதியில் வசிக்கும் 76 குடும்பங்களுக்கு கணத்தம்பூண்டியில் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

தனி வீடு கோரி போராட்டம்...!

விழாவில் பங்கேற்க அமைச்சா் எ.வ.வேலு வருவதற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் பெண்கள் மற்றும் சிறுவா்கள் சாலையில் அமா்ந்து தங்களுக்கு அடுக்குமாடி வீடு வேண்டாம்.

தனி வீடு வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் சமாதானம் செய்தனா். இருப்பினும், அமைச்சா் எ.வ.வேலு வந்ததும் மீண்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை மீண்டும் போலீஸாா் சமாதானம் செய்தனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க