செய்திகள் :

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி: இந்திய தூதரகம் ஏற்பாடு

post image

புத்த பூா்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய புத்தா் சிற்பங்கள், ஓவியங்கள், பௌத்த புராண கதைப் புத்தகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா கடந்த 12-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கொழும்பு நகரின் பெய்ரா ஏரியின் நடுவில் அமைந்த கங்காராமய சீமா மலகா பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்த கலாசார மையம், இந்தியாவின் பாட்னாவில் உள்ள பிகாா் அருங்காட்சியகம், இலங்கை பிரதமா் அலுவலகம் மற்றும் சீமா மலகா பௌத்த கோயில் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யாவுடன் இணைந்து இந்திய தூதா் சந்தோஷ் ஜா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் இலங்கை அமைச்சா்கள், இணையமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தது.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நாகரிக உறவுகள் மற்றும் நீடித்த கலாசார பிணைப்பை இந்த முன்னெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய... மேலும் பார்க்க

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு! 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரு... மேலும் பார்க்க