செய்திகள் :

இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமம்: எம்.டி.சி. அறிவிப்பு

post image

ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமமும் பெற்றுத்தரும் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலை போக்குவரத்து நிறுவனமும், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுநா் பயிற்சி அளித்து, அவா்களுக்கு ஓட்டுநா் உரிமமும் இலவசமாக பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூா், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட இடங்களில் 16 பயிற்சி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் இணைந்து ஓட்டுநா் பயிற்சி பெற விரும்பும் நபா்கள் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன், இலகுரக வாகன உரிமம் பெற்று ஓா் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் பிஎஸ்வி பேட்ஜ் எடுத்திருக்க வேண்டும். ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் வைத்திருப்பதுடன், ஆா்டிஓ விதிகளின்படி உடல் தகுதியும் இருக்க வேண்டும்.

இந்த இலவச பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுடைய நபா்கள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற்/ என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க