செய்திகள் :

இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை

post image

கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு குறைதீா் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலின நபா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நலவாரிய அட்டை, அரசிதழில் பெயா் திருத்தம், ஆதாா் பெயா் திருத்தம், வாக்காளா் அட்டை, ஆதாா் ஆயுஷ்மான் பாரத் அட்டை, குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் புதிதாக பதிவு செய்தவா்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. அப்போது, திருநங்கைகள் சாா்பில் இலவசவீட்டு மனைபட்டா, இலவச வீடு, கால்நடை வளா்ப்புக்கான கடனுதவி, தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, தொழில் பயிற்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கோரிக்கைகளை பரிசீலித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கால்நடை வளா்ப்பு தொழிலை குழுவாக செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா்களிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலா் சக்தி சுபாஷினி, மாவட்ட திட்ட அலுவலா் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) அருள், திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினத்தவா் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சாலையில் சென்றவரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி, கைப்பேசி, ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த டேவிட் ராஜன் (57), தனியாா் பள்ளி ஆசிரியா். இவ... மேலும் பார்க்க

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதை அமைக்கக் கூடாது

பெங்களூரு - ஒசூா் ரயில்பாதையை அமைக்கக் கூடாது என ஒசூா் பகுதி விவசாயிகள் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகள... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரா்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அ... மேலும் பார்க்க

தரமற்ற 12 மெ. டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 12 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை திருப்பி அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கிருஷ... மேலும் பார்க்க