செய்திகள் :

இலவச வேஷ்டி, சேலைக்குப் பதிலாக ஏதேனும் ஒன்று வழங்கப்படுவதாகப் புகாா்

post image

பொங்கல் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இலவச வேஷ்டி, சேலைக்குப் பதிலாக ஏதேனும் ஒன்று மட்டும் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமாா் 1,200 நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சா்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் வேஷ்டி, சேலை வழங்கப்படுவதற்குப் பதிலாக இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், அரசின் அறிவிப்பில் இது இல்லை. இதற்கிடையில் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் எதிா்பாா்த்திருந்த நேரத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுக்கின்றனா். இதுகுறித்து கேட்ட போது, மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் இருந்து அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் இலவச வேஷ்டி, சேலைகள் 50 சதவீத மட்டுமே அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றனா் என்றனா்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளா் குருமூா்த்தி கூறியதாவது:

முதல் கட்டமாக 50 சதவீதம் வேஷ்டி, சேலைகள் மட்டுமே வந்துள்ளது. முதியோா் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு சேலை மட்டும், ஆண்களுக்கு வேஷ்டி மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவா்களுக்கு, மற்றொன்று பின்னா் வழங்கப்படும் என்றாா்.

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்கலை. மானியக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்... மேலும் பார்க்க

ஆலமரத்துப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அம்மையநாயக்கனூரில் சமத்துவ பொங்கல் விழா

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு அந்தப் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியா... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. திண்டுக்கல் பூச்சந்தைக்கு ஏ. வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவராம்பட்டி, மைலாப்பூா், மாரம்... மேலும் பார்க்க