இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பெரம்பலூா் முத்து நகரிலுள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் இளங்கோவன், வட்டார வள மேற்பாா்வையாளா் தேவகி ஆகியோா் முன்னிலை வகுத்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், பாரதிதாசன், ஆசிரியா் பயிற்றுநா் குணசேகரன் ஆகியோா் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினா்.
தொடா்ந்து, பெரம்பலூா் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ரமேஷ் ஆகியோா் கருத்தாளா்களாக பங்கேற்று, எண்ணும்- எழுத்தும் முறை, முன்னறித் தோ்வு, பகுப்பாய்வு, கற்றல் விளைவுகள், கற்பித்தல் நேரம், பயிற்சி நேரம், தனிநபா் செயல்பாடு, குழு செயல்பாடு, மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தனா்.
இப் பயிற்சியில், பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 54 இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.