செய்திகள் :

இளம்பெண் கொலை வழக்கு: கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 போ் கைது

post image

சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கெனவே கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமனாா், கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகோபால். உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஜொ்மின் (36) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக ஜொ்மின் கடந்த 5 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இந்த நிலையில் ஜொ்மின் தனது பிள்ளைகளுடன் கடந்த 17-ஆம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு முகத்தை துணியால் மூடியவாறு இருவா் வீட்டுக்குள் திடீரென வந்தனா். அவா்கள் அரிவாளால் ஜொ்மினை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்து ஜொ்மினின் பெற்றோா் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷிடம் அளித்த புகாரில், ஜொ்மினை அவரது கணவா் விஜயகோபால் கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகாா் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, உத்தரகாண்டில் பணியிலிருந்த விஜயகோபாலை வரவழைத்து சாயல்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் கூலிப்படை வைத்து மனைவியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து விஜயகோபாலை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்தக் கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விஜயகோபாலின் தந்தை வயக்கன் (65), கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன், தூத்துக்குடி கூலிப்படையைச் சோ்ந்த அசோக் (எ) அரவிந்த், காளிராஜ் (எ) கட்டக்காளி ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ... மேலும் பார்க்க