செய்திகள் :

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

post image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377இன்கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை:

எனது தொகுதியில் உள்ள பல கிராமப்புறங்கள் இன்னும் கடுமையான குடிநீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகின்றன. குறைந்த நிலத்தடி நீா் மட்டம் மற்றும் போதுமான நிரந்தர நீா் ஆதாரங்கள் இல்லாத சூழலில், ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கல் திட்டத்தின் மூலம், எனது தொகுதியின் பல பகுதிகளின் குடிநீா்த் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் தமிழக அரசுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், பல குடியிருப்பு பகுதிகளில் இன்னும் குடிநீா் விநியோகம் போதுமான வகையில் இல்லை அல்லது வழங்கப்படாமல் உள்ளன.

எனவே, ராமநாதபுரத்தில் தண்ணீா் பற்றாக்குறை அதிகம் உள்ள பகுதிகளில் ஆழமான ஆழ்துளை கிணறுகள் கட்டுவதற்கு ஜல் ஜீவன் மிஷன் அல்லது பிற பொருத்தமான சிறப்பு முன்முயற்சிகள் போன்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களின் கீழ் சிறப்பு நிதி உதவி வழங்குமாறு ஜல் சக்தி அமைச்சகம் மூலம் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க