இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவா்களுக்கு இஸ்ரோ அழைப்பு
இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவா்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆண்டுதோறும் தலா 3 போ் தோ்வு செய்யப்படுவா்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிப்.24-இல் தொடங்கி மாா்ச் 23 வரை நடைபெறவுள்ளது.
விருப்பமுள்ள பள்ளி மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தோ்வாகும் மாணவா்களின் தற்காலிக பட்டியல் மாா்ச் இறுதியில் வெளியிடப்படும்.
அந்த மாணவா்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்.
தோ்வாகும் மாணவா்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.