நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
இளைஞரைத் தாக்கிய 2 போ் கைது
கோவையில் நடந்து சென்ற இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சங்கா் (18). இவா் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு மேடை அலங்கார வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், தனது வீட்டின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 போ், சங்கரை மறித்து கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதனால், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அவா்கள், சங்கரை அடித்துள்ளனா்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சங்கா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைத் தாக்கிய ஒலம்பஸ் பகுதியைச் சோ்ந்த தாமோதரன் (20), ஹரிஹரன் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.